எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும்

எனை நோக்கி பாயும் தோட்டா படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும்


தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கு பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது


பிக்பாஸில் விதிமீறிய கவின் - லாஸ்லியா... வீடியோ வெளியிட்டு ஹவுஸ்மேட்ஸிடம் மாட்டிவிட்ட கமல்

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

16 போட்டியாளகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டில் 1,300 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

லக்ஸரி பட்ஜெட் ஏன் குறைந்தது என்ற விளக்கத்தை இன்று வெளியான பிரோமோவில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். அதில், “லக்ஸரி பட்ஜெட் குறைந்தற்கு விதிமீறல் தான் காரணம். விதிமீறல் மூலம் விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதற்கான படம். இது குறும்படம் அல்ல, ஒரு விளக்கம் படம். போட்டியாளர்களுக்கு விளங்க வேண்டும் என்றார்.





மேலும் கமல் வெளியிட்ட விளக்கப்படத்தில் கவின் மற்றும் லாஸ்லியா தனியாக மைக் ஆஃப் செய்துவிட்டு பேசுகின்றனர். இதை பார்த்த ஷெரின் மற்றும் வனிதா அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைக் ஆஃப் செய்துவிட்டு மற்ற போட்டியாளர்களுடன் பேசக் கூடாது என்பது விதியாகும். இதனை மீறி உள்ளதால் கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு ஏதும் தண்டனை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Videos

0 comments: